Saturday, October 24, 2009

மருதாணி

உனக்கு நான் மருதாணி இட்டு விட வேண்டும் என்று ஆசையாய் கைகளை நீட்டினாய் ,
சரி என்று உன் விரல்களை பற்றினேன் , அடுத்த கணமே உன் உடல் முழுவதும் அல்லவா சிவந்தது !!!!
இதற்கு ஏனடி மருதாணி ????? இந்த மானிடன் போதுமே ???

Tuesday, October 20, 2009

உன் வைராக்கியம்

என்னையே மணக்க வேண்டும் என்ற வைராக்கியம் உனக்கு பிறப்பில் இருந்தே உள்ளது ..... எப்படி ?
அதனால் தானே காத்திருந்து எனக்கு பின்னால் பிறந்தாய் ...!!!

Monday, October 19, 2009

உன் தரிசனம்

மாடி படியில் நான் வரும்போது , அழகாக சிரித்தபடியே குறுக்கே வந்தாய் ,
வழி மரித்தாய் என்று நான் நினைத்தேன் ..
ஆனால் காதல் என்னும் சிறப்பு வழியில் என்னை அழைத்து சென்று
உன் தரிசனம் தந்தாய் :-)

போதை

நான் போதைக்கு அடிமை
உன் மடியில் ஆசையாய் விழுந்து , மயங்கி கிடக்கும் போதையை கூறினேன்
போதையால் வாழ்கையை இழந்தவர் பலர் , உன் போதையால் வாழ்கையை பெற்றவன் நான் !!

Sunday, October 18, 2009

நாம் இணைவோம்

எத்தனை தடைகளடி நம்மை பிரிக்க ?
சாவினால் இணைவது நம் வழி அல்ல ,
சாதித்து இணைவதே நம் வழி :)

வேகத்தடை

சாலையில் வேகத்தடை - என் வேகத்தை குறைத்தது
உன் வேக தடையோ - என் வேகத்தை கூட்டியது ;-)

குற்ற பத்திரிக்கை

அவள் மீது நான் தாக்கள் செய்யும் குற்ற பத்திரிக்கை -
என்னை விழ வைத்தால் - பார்வையில்
என்னை அழ வைத்தால் - ஆனந்தத்தில்
என்னை அடித்தால் - பாசத்தில்
என்னை கட்டி வைத்தால் - காதலில்
அவளுக்கு என் மன சிறையில் ஆயுள் தண்டனை தருமாறு கேட்டு கொள்கிறேன் !!

என் ஆசை

காதலால் என் கண்களில் கண்ணீர் கசிய வைத்த முதல் பெண் நீ என்று பொய் சொல்ல மாட்டேன் .
ஆனால் நீயே கடைசி பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை பட்டேன் ....

விடுதலை வேண்டாம்

நீ என்னை உன்னில் சிறை எடுக்க ஒரு வருடம் ஆனது
உன்னில் வந்த பின் , என்னை விடுதலை செய்யாதே என்று சொல்ல
எனக்கு ஒரு வினாடி தானே ஆனது !!!

என்னை தொலைத்தேன்

அன்று நீ என்னை தேடியபோது நான் உன்னிடம் இல்லை
ஆனால் இன்றோ , உன்னில் என்னை துளைத்து விட்டு
என்னை நானே தேடுகிறேன் !!

மற்ற ஆண்களுக்கு !!

உன் அழகை ரசிக்கும் ஆண்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் ..
உங்களால் அவளை ரசிக்க மட்டுமே முடியும் ..
என்னால் மட்டும் தான் , அவளை ரசிக்கவும் முடியும் , ரசிக்க வைக்கவும் முடியும் !!

நான் அழகன் !

ஆயிரம் ஆண்களுக்கு நடுவே அவள் கண்கள் என்னை மட்டுமே ரசிக்கும் ,
நான் ஆண் அழகன் என்று கூறவில்லை ....
அவளுக்கு நான் தான் அழகன் என்று கூறுகிறேன் ...

என் சின்ன சின்ன ஆசைகள்

உன் இதழ்களால் என்னை நீ இனிக்க வேண்டும்
மருதாணி பாதங்களால் என் மார்பினை மிதிக்க வேண்டும்
கதை பேசி உன் மடியில் படுக்க வேண்டும்
உன் பெண் வாசனையை என் மூச்சில் திணிக்க வேண்டும்
என் மாங்கல்யம் உன் மார்பு குழியில் ஜொலிக்க வேண்டும் !!!

உன் பார்வை

பழக பழக புளிப்பது பால் மட்டும் தான் .
பெண்ணே , உன் காதல் பார்வை அல்ல !!

உன் வியர்வை !!

மண் வாசனயை எனக்கு உணர்த்தியது மழையின் துளி
பெண் வாசனயை எனக்கு உணர்த்தியது உன் வியர்வை துளி !!

என்னை மாற்றியவள்

வெற்று காகிதமாய் நான் இருந்தேன்
உன் காதலினால் என்னை கவிதை நூல் ஆக்கினாய்!

எத்தனை முகம் ?

உன் கைகளை பிடித்தேன் - தோழி ஆனாய்
உன் இதழ்களை சுவைத்தேன் - காதலி ஆனாய்
கட்டி அணைத்தேன் - மனைவி ஆனாய்
மடியில் சாய்ந்தேன் - அன்னை ஆனாய்
இத்தனை அவதாரங்கள் எடுகிறாய் ???
கோளாரு உன்னிள்ள??? , இல்லை என் கண்ணிலா ????

மோதிரம்

என்னை காதலிக்கும் முன் ஒரு விரலுக்கு ஒரு மோதிரம் அணிந்து அழகு பார்த்தாய்
ஆனால் என்னை காதலித்த பின் , என் கரத்தினால் உன் கரம் பிடிக்கும் வரை ,
அந்த மோதிரத்துக்கும் உன் விரலில் இடம் இல்லை என்று கழற்றி எறிந்தாய் !!!!

காதல் பார்வை

உன் கண்களுக்கு மை இட்டால் அழகு கூடும் என்று நான் நினைத்தேன்
ஆனால் துளியும் பொய்யே இல்லாத உன் காதல் பார்வை தான் கண்களுக்கு அழகு என்று சொல்லாமல் என்னிடம் சொன்னாய் - அதே கண்களால்
!!!